முன்னனி நடிகர்களை நம்பவில்லை – இயக்குனர் சுசிந்திரன்

முன்னனி நடிகர்களின் அழைப்புக்காக காத்திருக்காமல், புதுமுக நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார் சுசீந்தரன்.

விக்ரம், விஷால், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் சுசீந்தரன். ஆனால் சமீபகாலமாக அவர் தனது கதைக்கு முக்கியத்துவம் அளித்து, புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கத்தில் ஏஞ்சலீனா, சாம்பியன், ஜீனியர்ஸ் என மூன்று தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.

இதில் ஜீனியர்ஸ் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இது குறித்து பேசியுள்ள இயக்குனர் சுசீந்தரன், முன்னனி நடிகர்களின் அழைப்புக்காக காத்திருப்பது முட்டாள்தனமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version