உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

புதுக்கோட்டையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை பூங்காநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுவாமி ஐயப்பன் ஆலயத்தின் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் 27-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, உலக நன்மைக்காகவும், மழை பெய்யவேண்டியும் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, ஐயப்பன் சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version