காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஏரியின் மதகுகள் சேதம்

கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மதகு மற்றும் கால்வாய்களை சீரமைத்து தர தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தகரை ஏரியின் மதகுகள் சேதமடைந்து, உடையும் நிலையில் உள்ளது. மேலும், மழைக் காலங்களில் ஏரியில் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதாகாவும், ஏரியை தூர்வாரி, மதகுகளை சீரமைத்தால், சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version