சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக அவசரமாக கூடிய கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்பக்கூடாது, தங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இவற்றை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கேரள சட்டப்பேரவை அவசரமாக கூடியது. சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரச்சினை கிளப்பியதால் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

 

Exit mobile version