நடப்பு கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாடப்புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கியுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் சிவகாசி, சென்னை மற்றும் ஆந்திராவில் அச்சடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி திறப்பு நாளின்போது அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஈரோட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புத்தகங்கள் அனைத்தும் வகுப்பு வாரியாகவும், மொழி வாரியாகவும் பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று துவங்கி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version