பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் -இரண்டாவது வெற்றியை பெற்றது இந்திய அணி

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில், விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் மிதாலி ராஜ் 56 ரன்களும், மந்தனா 26 ரன்களும் எடுத்தனர்.

 

Exit mobile version