டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மேற்கு இந்திய அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதைத்தொடர்ந்து, 72 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷாவும், ராகுலும் தலா 33 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. 

Exit mobile version