பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை உடனடியாக மீட்க வேண்டும் : இல.கணேசன்

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது மனதுக்கு பெரும் ஆறுதலாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை உடனடியாக மீட்க வேண்டும் என இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version