சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: ராபர்ட் வதேரா ஆஜர்

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப்ரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆஜரானார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் சொத்து வாங்கியதாகவும், ராஜஸ்தானில் நில மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகள் தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு தடை விதிக்க வதேரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை தொடர்பாக வதேரா ஆஜராகியுள்ளார்.

Exit mobile version