மானிய விலையில் அரசு வழங்கிய விதைகள் மூலம் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல்

விருதுநகர் மாவட்டத்தில் மானிய விலையில் அரசு வழங்கிய விதைகள் மூலம் அதிக மகசூல் கிடைத்துள்ளதாக மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்காபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் போதிய விளைச்சல் இல்லாத நிலையில், தற்பொழுது விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மானிய விலையில் அரசு வழங்கிய விதை மூலம் அதிக மகசூல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 30 கிலோ முதல் 40 கிலோ வரை மிளகாய் கிடைப்பதாக அறுவடை செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.

Exit mobile version