சேத்தியாத்தோப்பு பகுதியில் கோடைக்காலம் தொடங்கியநிலையிலும் கடும் பனிப்பொழிவு

கோடைக்காலம் தொடங்கிய நிலையிலும், சேத்தியாத்தோப்பு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

காலை 9 மணி வரை பனி படர்ந்துள்ளதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்கின்றன. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Exit mobile version