திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட புஷ்பயாகம்

 

திருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் பூக்களைக் கொண்டு பிரமாண்ட புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி உற்சவ மூர்த்திகள் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை, 18 ரக மலர்களைக் கொண்டு உற்சவருக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களைக் கொண்டு புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

வருடாந்திர புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய சுப்ரபாதம், சகஸ்ர தீ

ப அலங்கார சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜீத சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

Exit mobile version