பெண் தர மருத்த பெண்ணின் தாயிடம் அத்துமீறிய 9 பேர் கொண்ட கும்பல்

பெண் தர மறுத்த தாயிடம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி மானபங்கம் செய்த 9 பேர் கொண்ட கும்பலில் 7 பேரை போலீசார் கைது செய்து இருவரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி அணைமேடு பகுதியில் வசித்து வருபவர்கள் சந்திரன்,முல்லைக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், இங்குள்ள எருமாபாளையம் பகுதியிலுள்ள சிவா என்பவர், இவர்களது மூத்த மகளை பெண் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துவந்த நிலையில், வேறொருவருக்கு சம்மந்தம் பேசி இருந்தனர். இதனால் 9 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் தாயிடம் கத்தியை காட்டி மிரட்டி, உடையை கிழித்து மானபங்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தமிழன்,கணேசன், சதீஸ்,வல்லரசு, தினேஷ்,ராஜா மற்றும் மாதர்அலி ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்

Exit mobile version