கஜா புயல் பாதிப்பு குறித்த முதல் அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்

கஜா புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிப்பு குறித்த முதல் அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறினார். 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மேலோங்கி நிற்கும் என்று தெரிவித்தார்.

மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஒவ்வொரு முறை அணை கட்டும் போதும், தமிழகம் தனது எதிர்ப்பை தெரிவித்து வருவதாக கூறினார்.

Exit mobile version