ரஃபேல் மறுசீராய்வு மனுக்கள் 26ம் தேதி முதல் விசாரணை

ரஃபேல் வழக்கு மீதான உத்தரவை, மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள், வரும் 26 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்திர்ல கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், விரிவான விசாரணை தேவையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ரஃபேல் விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், வரும் 26 ஆம் தேதி முதல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version