வனப்பகுதியில் தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்க தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், அங்குள்ள மரங்கள், செடிகொடிகள் என அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன. இதனால் அங்கு எழிதில் காட்டு தீ பற்றும் சூழல் உறுவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தீ பிடிக்காமல் தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தினக்கூலிப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version