காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன.

விழாக் குழுவினர் நிர்ணயித்த தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 ரூபாய் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Exit mobile version