தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

தருமபுரி – மொரப்பூர் இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

358 கோடி மதிப்பில் தருமபுரி – மொரப்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை எழும்பூர்- கொல்லம் இடையேயான விரைவு ரயில் சேவையையும் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Exit mobile version