கோலி தொடர்ந்து 4-வது முறையாக சதமடிப்பாரா என ரசிகர்கள் ஆவல்!

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 4 வது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

இதனையடுத்து நடந்த மூன்றாவது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3 போட்டிகளில் சதமடித்து தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பகல் இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் கோலி தொடர்ந்து 4 வது முறையாக சதமடிப்பார் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தொடரில் இரு அணி அணிகளும் சம நிலையில் உள்ளதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version