சால்வை அணிவிக்க மேடை ஏறிய முதியவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம்

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரத்திற்கு சால்வை அணிவிக்க மேடை ஏறிய முதியவரை கீழே தள்ளி விட்ட சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து சென்னையில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. உரை நிகழ்த்த சென்ற ப.சிதம்பரம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அணிவித்த பொன்னாடையை ஏற்றுக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வயது முதிர்ந்த தொண்டர் ஒருவர், சால்வை அணிவிக்க மேடை ஏறிய போது, அவரை ப.சிதம்பரம் தடுக்கச் சொல்லி கையை அசைத்தார். இதனால் திமுகவினர் அவரை கீழே தள்ளி விட்டனர். பின்னர் கேமிராவில் பதிவாகிறது என்று கூறவே, மீண்டும் அவர் அளித்த சால்வையை பெயரளவில் சிதம்பரம் கைகளில் பெற்றுக் கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

Exit mobile version