தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த திமுகவினர்

தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த திமுகவினர் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழனிச்சாமி, பாரதி, இளங்கோ ஆகியோர் தரமற்ற எம் சாண்ட் மணலை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குவாரிக்கு திருட்டு மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கனிமவள அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அங்குள்ள ஓடைகளில் இருந்து திருட்டுத் தனமாக மணல் அள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மணல் அள்ளிய வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version