மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளரும் நிறுவன தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்போர், வரும் 24ம் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களை அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப கட்டணமாக பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரமும், தனி தொகுதிக்கு 10 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version