குரூப்-1 தேர்வில் சாதனை படைத்த பட்டாசு தொழிலாளியின் மகள்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டாசு மூலப்பொருட்களை விற்பனை செய்யும் தொழிலாளியின் மகள் துணை ஆட்சியர் பணிக்கான நியமனம் ஆணையைப் பெற்றார்.

சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்த கருப்பசாமி பட்டாசு  மூலப் பொருட்கள் தயாரிக்கும் பணியை, தனது வீட்டில்  செய்து வருகிறார். இவரின் மகள் மகாலட்சுமி, பொறியியல் படிப்பை முடித்து விட்டு, தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.  பெற்றோருக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் குரூப்-1 தேர்வுக்கான பயற்சிகளையும் மேற்கொண்டு வந்த மகாலட்சுமி, கடந்த ஆண்டு  குரூப் -1 தேர்வு எழுதி உள்ளார். தேர்வின் முடிவில் 547 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 4-வது இடம் பிடித்து அவர் சாதனை படைத்தார். இதையடுத்து டி.என்.பி.சி நிர்வாகம் துணை ஆட்சியர் பதவிக்கான பணி நியமன ஆணையை மகாலட்சுமிக்கு வழங்கினார். வெற்றிக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என நிரூபித்து காட்டிய மகாலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version