இரு குழந்தைகளை கொலை செய்த கொடூர தந்தை

கோவையில் தனது இரண்டு குழந்தைகளை தந்தையே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன், செல்வராணி தம்பதிக்கு ஹேமா வர்ஷினி, ஸ்ரீஜா என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வராணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் பத்மநாபனுடன் தங்கியிருந்த 2 குழந்தைகளும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி பிரேமா, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பத்மநாபனை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Exit mobile version