பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொடூர தந்தை கைது

கோவையில் இரு பெண் குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன், செல்வராணி தம்பதிக்கு ஹேமா வர்ஷினி, ஸ்ரீஜா என்ற குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் செல்வராணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனிடையே தன்னுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரு பெண் குழந்தைகளையும் பத்மநாபன் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்தநிலையில் நேற்றிரவு அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்து பத்மநாபனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை இன்று பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Exit mobile version