கொரோனா இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 871 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட15 ஆயிரத்து 677 குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 13 புள்ளி 39 சதவீதமாக உள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 871 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 92 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 3 லட்சத்து 35 ஆயிரத்து 939 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா பாதித்த 20 லட்சத்து 4 ஆயிரத்து 333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version