டிச.21 முதல் டிச.25 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவதால், தொடர் விடுமுறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் ஊதிய பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 21ஆம் தேதி, நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. 22ஆம் தேதி, 2வது சனிக்கிழமை என்பதால் அன்றும், ஞாயிற்றுக் கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் 24ஆம் தேதியை தவிர, 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் நடைபெறாது.

Exit mobile version