ராமர் கோயில் கட்டுமான தேதி அடுத்தாண்டு அறிவிக்கப்படும் -அயோத்தியில் நடைபெற்ற தர்மசபா கூட்டத்தில் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்குவது தொடர்பான தேதி அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்று இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர்கோயில் கட்டுமானம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தர்ம சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், சிவசேனா, ராம் ஜென்ம பூமி நியாஸ், நிர்மோகி அகாரா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிரக்யாராஜ்-ல் நடைபெறும் கும்பமேளாவின்போது, அறிவிப்பதென அப்போது முடிவு செய்யப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரிலேயே ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வரப்படலாம் எனவும், ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டால், இந்தியா, இந்து தேசம் என அறிவிக்கப்படும் எனவும் தர்ம சபா கூட்டத்தில் பேசியவர்கள் கூறினர். அடுத்த கூட்டம் டெல்லியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version