டெல்லியில் கடும் குளிர், மாசு காரணமாக பொதுமக்கள் அவதி

டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மாசு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொது இடங்களில் மக்கள் தீயை மூட்டி குளிர்காய்கின்றனர். பகலிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் விளக்குகளுடன் வாகனங்கள் செல்கின்றன. 4 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை உள்ளதால், காலை 10மணிக்கு மேல் தான் வீட்டை விட்டு வெளியே வர முடிவதாக டெல்லி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது காற்றின் மாசும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசு மற்றும் பனிமூட்டம் காரணமாக நடைபயிற்சி மேற்கொள்வதும் கடினமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version