ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எம். வேணுகோபால், எஸ். வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த சமரசமும் செய்ய தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பை காலி செய்ய மறுப்பவர்களின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை உடனே நிறுத்தவும், அவர்களது குடும்ப அட்டைகளை திரும்ப பெறவும் நீதிபதிகள் கூறினர். அரசு வழங்கும் பலன்களை குடும்ப அட்டை மூலமாக அவர்கள் பெறவில்லை என்பதை உறதி செய்ய வேண்டும் என்றும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர்தான் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Exit mobile version