தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், கன்னியாகுமரி முதல் கடலோர தமிழகம் வழியாக தெற்கு ஆந்திரா வரை வளிமண்டலத்தில் காற்றில் ஏற்பட்டுள்ள திசை மாறுபாடு காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள் தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version