மத்திய அரசு விரும்பினால் பிப்ரவரி மாத இறுதிக்குள் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசு விரும்பினால் பிப்ரவரி மாத இறுதிக்குள் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியிலுள்ள கூகலூர், குருமந்தூர் உள்ளிட்ட மேல்நிலை பள்ளிகளில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 542 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். மத்திய அரசு விரும்பினால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version