கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார், கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுப்பவர் என்றும், சரியான பாதையில் செல்பவர்கள் சரியான இடத்துக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

 

Exit mobile version