அறங்காவலர் குழுவை அமைக்கக் கோரிய வழக்கு – அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், பதில் மனுத்தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

Exit mobile version