BCCI அமைப்புக்கு தடை கோரிய வழக்கு- மத்திய அரசு, கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உத்தரவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று டெல்லியை சேர்ந்த கீதாராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் புகார் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு உத்தரவிட்டனர்.

 

Exit mobile version