கர்நாடகாவில் நாடாளுமன்ற தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மக்கள் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதால் அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த 5 தொகுதிகளிலும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. பா.ஜ.க. தனித்து போட்டியிட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version