ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 6 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம், சோமவாரப்பட்டி, இலுப்பநகரம், மூங்கில் தொழவு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில், பொள்ளாச்சி நாடளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version