கடற்கரையில் இரவு 8 மணி முதல் காலை 4 மணிவரை அனுமதி இல்லை: காவல்துறை அறிவிப்பு

சென்னையில், புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

விபத்தில்லா புத்தாண்டை உறுதி செய்வதற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரும் திங்கள் கிழமை இரவு 8 மணி வரை மட்டுமே மெரினா கடற்கரையில் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட் நகர் கடற்கரையில் திங்கள் முதல் செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று மாநகர போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version