மேடவாக்கம் அருகே அனுமதியின்றி திமுக சார்பில் திறக்கப்பட இருந்த ஆட்டோ நிறுத்தம் அகற்றம்

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும், இடையூறு ஏற்படுத்தும் வகையில், திமுகவினர் வைத்த ஆட்டோ நிறுத்த பெயர் பலகையை போலீசார் அகற்றினர்.

சென்னை அடுத்த மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகே திமுகவினர், அனுமதியின்றி ஆட்டோ நிறுத்தம் திறக்க ஏற்பாடு செய்திருந்தனர்.அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் பெயர் பலகை திறக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி திறக்கப்பட இருந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனால் திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, கொடி கம்பம் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. போலீசாரின் இச்செயலுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version