தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் சென்னை ஓட்டேரியில் உள்ள ஸ்டாரன்ஸ் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போனை மர்மநபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த ஓட்டேரி காவல்நிலைய அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசாந்த் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை பிரசாந்த் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்து திருட்டு செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version