அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது…

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெலுங்கு பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் வரலாற்று சாதனையாக உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார் என்றும் குறிப்பிட்டார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பான முறையில் கூட்டணி அமைந்துள்ளதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டதாகவும் வேலுமணி விமர்சித்தார். மத்தியில் ஆளும் அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்திற்கு நல்ல திட்டம் வரும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Exit mobile version