ஒன்றரை கோடி தொண்டர்களால் அதிமுக இயக்கம் மேலும் மேலும் வலுப்பெறுகிறது

ஒன்றரை கோடி தொண்டர்களால் அதிமுக இயக்கம் மேலும் மேலும் வலுப்பெறுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்திற்காக கொண்டு வந்த திட்டங்களை விளக்கி அமைச்சர் தங்கமணி பேசினார். தேர்தலுக்காக அவர் ஒரு போதும் திட்டங்களை கொண்டு வந்ததில்லை என்றும், மக்களுக்காகவே அவர் திட்டங்களை கொண்டு வந்தார் என்று சுட்டிக் காட்டினார். தினகரனை துரோகி என கடுமையாக சாடிய அவர், ஜெயலலிதாவால் 10 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் அவர் என்று சுட்டிக்காட்டினார்.

Exit mobile version