அதிமுக – தேமுதிக இடையிலான கூட்டணியில் இழுபறி இல்லை

மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே, மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக – தேமுதிக இடையிலான கூட்டணியில் இழுபறி இல்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version