மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஆயினும் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் தொடர்ந்தன.

இதையடுத்து உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர். கடந்த 6ம் தேதி முதல் 16ம் தேதி வரையில் திரையரங்குகளின் தினசரி வருவாய் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version