புதுச்சேரியில் 3-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் !

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3 மாதங்களாக வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2015ல் இருந்து தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை தங்களது கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தெடர்ந்து 3-வது நாளான இன்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Exit mobile version