தஞ்சை மாவட்டத்தில் 2 வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில், மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதிக்குச் சென்ற அவர்கள், புயலால் சேதமடைந்த குடிசைப் பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வடகாடு, முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பின்னர் தஞ்சை மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பொதுமக்களை சந்தித்த மத்திய குழுவினர், அவர்களிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

 

 

 

Exit mobile version