நாமக்கல், திருச்செங்கோடு துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் தங்கமணி பங்கேற்று சீருடைகளை வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான சீருடைகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு
பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீருடைகளை வழங்கினார். இதனைதொடர்ந்து, செல்வி.ஓவியா மற்றும் செல்வி.ஆராதனா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், இருவரையும் கௌரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version