கஜா புயல் நிவாரணத் தொகை பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் – தம்பிதுரை

கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால் தான் உரிய நிவாரண நிதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் முதல் கட்டமாக 15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகளை பார்க்கும்போது சேதம் அதைவிட அதிகமாக இருக்கும் என்று தம்பிதுரை கூறினார்.

Exit mobile version