ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா, ரங்கா என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Exit mobile version