தாய்லாந்தில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் சுட்டுக்கொலை

தாய்லாந்தில் 26 பேரை சுட்டுக் கொலை செய்த ராணுவ வீரரை, காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஜக்ராபாந்த் தோமா என்ற ராணுவ வீரர், ராணுவ முகாமில் இருந்த துப்பாக்கியை திருடி, ராணுவத் தளபதி உள்ளிட்ட 3 பேரை சுட்டு கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, ராணுவ வாகனத்தில் தப்பிச் சென்ற அவர், நகோன் ராட்சசீமா மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள வணிக வளாகத்தினுள் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார். ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவாறு இந்த கொடூரச் செயலில் அவர் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், 57 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், 16 மணி நேர போராட்டத்துக்கு பின், காவல்துறையினர் தோமாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அவரிடம் சிக்கித்தவித்தவர்களை மீட்டனர்.

Exit mobile version